Politics



கொரோனா காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மூடப் பட்டிருந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் 9-12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. தற்போது, தினசரி பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதால் 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.