சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.30.11.21 கடைசி நாள்.
29.11.21:
பள்ளி கல்லூரிகளில் படிக்கும் சிறுபான்மை மாணவ மாணவிகளுக்கு வருவாய் மற்றும் தகுதி அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் அதன்படி நடப்பாண்டில் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகைக்கு தகுதியான மாணவர்கள் நாளை செவ்வாய்க்கிழமை தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் புதுப்பித்து அதற்கான விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட கல்வி நிலையங்களில் வழங்க வேண்டும். இதற்கு வருமான சான்று தேவையில்லை.

ஆதார் கார்டில் பெயர் மற்றும் மாற்றம் காரணமாக இதற்கு முன்னர் புதுப்பித்தலுக்கு விண்ணப்பித்தவர்களும் தற்போது விண்ணப்பிக்கலாம். இது குறித்து கூடுதல் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *