நீலகிரி மாவட்டத்தில் சைபர் கிரைம் போலீசார் மூலம் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போலீஸ் எஸ்.பி பிரபாகர் கலந்து கொண்டு போலீசார் மீட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படை த்தார்.

 

எஸ்.பி பிரபாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3  மாதங்களில் 60 லட்ச மதிப்பிலான 180 செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் மீட்டு உள்ளனர். இதே போல் ஒரு கோடியே 23 லட்சத்து 18 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது .அதன் ஒரு பகுதியாக இன்று 80 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்து உள்ளோம்.

 

சைபர் கிரைம் குற்றவாளிகள் செல்போன் மூலம் வலைவீசி வருகின்றனர். அவர்கள் அதிக வட்டி தருவதாகவும், பணத்தை இரட்டிப்பு செய்து கொடுப்ப தாகவும் ஆசைவார்த்தைகள் கூறி வருகின்றனர். எனவே பொதுமக்கள் யாரும் சைபர்கிரைம் குற்றவாளிகளிடம் ஏமாறவேண்டாம். சைபர் கிரைம் சார்ந்த கு்ற்றங்களில் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *