நவம்பர் 1-ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் உட்பட 24 ரயில்கள் நேரம் மாற்றம்.

கோவை. அக்டோபர். 27-

கோவை தெற்கு ரயில்வே நிர்வாகம் ஆண்டுதோறும் சில ரயில்களின் நேரத்தை மாற்றம் ஏற்படுத்தி வருகிறது .

அதன்படி சென்னை எழும்பூர் கன்னியாகுமரி கோவை மயிலாடுதுறை உட்பட 24 சிறப்பு ரயில்களில் வேலை நேரம் மாற்றப்பட்டுள்ளது –

அதன் விவரம் வருமாறு:-

கோவை மயிலாடுதுறை ஜன் சதாப்தி விரைவு சிறப்புரையில் மயிலாடுதுறையை மதியம் 1.55 மணிக்கு சென்றடையும்,

நாகர்கோவில் விரைவு சிறப்புரையில் கொல்கத்தாவிற்கு மாலை 4.55 மணிக்கு சென்றடையும்.

சென்னை எழும்பூர் கொல்லம் விரைவு சிறப்பு ரயில் இரணியல் ரயில் நிலையத்தை 9:36 மணிக்கும். குழித்துறை ரயில் நிலையத்தை காலை 9 52 மணிக்கும், கொல்லத்திற்கு மதியம் 12.55 மணிக்கு மடையும்.

சென்னை எழும்பூர் கன்னியாகுமரி விரைவு சிறப்பு ரயில் நாகர்கோவில் காலை 5 மணிக்கு சென்றடையும்.

கோவை நாகர்கோவில் விரைவு சிறப்பு ரயில் மதுரை சந்திப்பு அதிகாலை 12. 25 மணிக்கும், விருதுநகர் சந்திப்பை அதிகாலை 1. 13-மணிக்கும் அடையும்.

இந்த ரயில்களின் நேரம் மாற்றம் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

புவனேஸ்வர் ராமேஸ்வரம் விரைவு சிறப்பு ரயில் திருச்சிக்கு மாலை 4.5 மணிக்கும். புதுக்கோட்டைக்கு மாலை 5.3 மணிக்கும் மானாமதுரை 6.55 மணிக்கும், ராமநாதபுரத்தை இரவு 7.53 மணிக்கு சென்றடைகிறது.

மதுரை ராமேஸ்வரம் விரைவு சிறப்பு ரயில் மானாமதுரை சந்திப்பை 7:10 க்கும். ராமநாதபுரத்தை இரவு 8 மணிக்கும், பாம்பணை இரவு 9.9 மணிக்கும் வந்தடையும்.

இந்த ரயில்களின் நேரம் மாற்றம் அடுத்த மாதம் 4-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மொத்தம் 24 சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி உள்ளது.train timing change

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *