புலிகளைப் பாதுகாப்பதன் அவசியம்.வனப்பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள்.

29.07.22:

உலக புலிகள் தினம் 29.07.22: கொண்டாடப்படுகிறது.இதனையொட்டி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு புலிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது.ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் ராமசுப்பிரமணியம் உத்தரவின்படி, பொள்ளாச்சி துணை இயக்குநர் கணேசன் தலைமையில் புலிகளைப் பாதுகாப்பதன் அவசியம் மற்றும் வனப்பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கும் விதமாக, நா. மூ. சுங்கத்தில் தொடங்கி ஆழியார் வரை பேரணி நடைபெற்றது.

வன உயிர் & இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை WNCT சார்பில் நடைபெற்ற பேரணியில், கோவை ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள், உதவி வன பாதுகாவலர் செல்வம், வன உயிர் & இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சிராஜ் தீன், வனச்சரகர்கள் மணிகண்டன், வெங்கடேஷ் மற்றும் வனத்துறையினர் கலந்து கொண்டனர்.
மாணவ, மாணவியர்கள் புலி வேடமிட்டு பேரணியில் பங்கேற்றனர். வனத்துறையினர் தங்களது முகத்தில் புலியின் தோற்றம் பொருந்திய ஓவியத்தை வரைந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதை அடுத்து அட்டகட்டியில் உள்ள பயிற்சி முகாமில் புலிகள் வாழ்வியல் குறித்து கண்காட்சி இடம் பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *