கோவை 17.06.23:

குடிநீரில் மனிதக்கழிவு கலந்ததால்  பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 36 வார்டில்  ரூபாய் 170 கோடி செலவில் பாதாள சாக்கடை பணி நடைபெற்று வருகிறது, இதில் ஒரு பகுதியாக 19 வது வார்டு பிரதான சாலை ராஜா மில் ரோட்டில் பாதாள சாக்கடை குழியில் கடந்த மூன்று நாட்களாக மனிதக்கழிவு குடிநீர் இணைப்பில் கலந்து வெளியேறுகிறது.,சாலையில் செல்லும் பொதுமக்கள் முகம் சுளிக்கும் அளவில் கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது,நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை, குப்பை வரி, வீட்டு வரி, சொட்டு வரி என 2024ம்  ஆண்டுக்கான வரியை பொதுமக்களிடம் நகராட்சி நிர்வாகம் வசூல்  செய்து வருகிறது .ஆனால் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை.எனவே  நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள்  சாலை மறியலில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு வந்த மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மைக்கேல் சகாயம், துர்நாற்றம் அதிக அளவில் வீசியதால் முக கவசம் வழங்கினர்.உடனடியாக சீர் செய்யப்படும் என உறுதி கூறி நகராட்சி ஊழியர்களை வரவழைத்ததால் மறியல் கைவிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *